Wednesday, January 5, 2011

ஐந்திணைகள்

அகத்திணையியலும் அன்பின் ஐந்திணைகளும்



அகத்திணை அன்பின் ஐந்திணை, கைக்கிளை,
பெருந்திணை எனப்படும் என்பதை முன்பே அறிந்தோம்.
அன்பின் ஐந்திணைகளாகிய முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்,
பாலை ஆகியவற்றின் முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள் ஆகியவற்றைக் காணலாம்.

2.3.1 குறிஞ்சித் திணை

முதற்பொருள்

நிலம் - மலையும் மலையைச் சார்ந்த இடமும்
பொழுது -


அ) பெரும்பொழுது - கூதிர்காலமும், முன்பனிக்காலமும்

ஆ) சிறு பொழுது - யாமம்



கருப்பொருள்கள்

1. தெய்வம் -

சேயோன்

2. உணவு -

ஐவன நெல் (மலை நெல்), தினை, மூங்கிலரிசி,
கிழங்கு

3. விலங்கு -

புலி, யானை, கரடி, பன்றி

4. மரம் -

அகில், ஆரம், தேக்கு, வேங்கை

5. பறவை -

கிளி, மயில்

6. பறை - முருகியம், தொண்டகப் பறை

7. தொழில் -

தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை
விதைத்தல், வேட்டையாடுதல்

8. யாழ் -

குறிஞ்சி யாழ்

9. பண் -

குறிஞ்சிப் பண்

10. ஊர் -

சிறுகுடி, குறிச்சி

11. நீர் -

அருவி நீர், சுனை நீர்

12. மலர் -

காந்தள், வேங்கை, குறிஞ்சி



உரிப்பொருள்



புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (நிமித்தம் = காரணம்)

2.3.2 முல்லைத் திணை



முதற்பொருள்

நிலம் - காடும் காட்டைச் சார்ந்த இடமும்

பொழுது -

அ) பெரும்பொழுது : கார்காலம்
ஆ) சிறுபொழுது : மாலை

கருப்பொருள்கள்

1. தெய்வம் -

மாயோன்

2. உணவு -

வரகு, சாமை

3. விலங்கு -

மான், முயல்

4. மரம் -

தோன்றி, காயா, பிடவம், குருந்தம்

5. பறவை -

காட்டுக்கோழி, சேவல்

6. பறை -

ஏறுகோட் பறை

7. தொழில் -

ஆநிரை மேய்த்தல், ஏறு தழுவல்

8. யாழ் -

முல்லை யாழ்

9. பண் -

குறிஞ்சிப் பண்

10. ஊர் -

பாடி, சேரி

11. நீர் -

குறுஞ்சுனை, கான்யாறு

12. மலர் -

முல்லை, குல்லை, தோன்றி, பிடவம்



உரிப்பொருள்


இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

2.3.3 மருதத் திணை

முதற்பொருள்

நிலம் -

வயலும் வயல்சார்ந்த இடமும்

பொழுது -

அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்
ஆ) சிறுபொழுது - வைகறை, விடியல்

கருப்பொருள்கள்

1. தெய்வம் -

இந்திரன் (வேந்தன்)

2. உணவு -

செந்நெல், கரும்பு

3. விலங்கு -

எருமை, நீர்நாய்

4. மரம் -

வஞ்சி, காஞ்சி, மருதம்

5. பறவை -

தாரா, நீர்க்கோழி

6. பறை -

மணமுழவு, நெல்லரி கிணை

7. தொழில் -

விதைத்தல், விளைத்தல்

8. யாழ் -

மருத யாழ்

9. பண் -

மருதப் பண்

10. ஊர் -

ஊர்கள்

11. நீர் -

ஆற்றுநீர், பொய்கை நீர்

12. மலர் -

தாமரை, கழுநீர்

உரிப்பொருள்

ஊடலும் ஊடல் நிமித்தமும்.

2.3.4 நெய்தல் திணை

முதற்பொருள்

நிலம -

கடலும் கடல் சார்ந்த இடமும்

பொழுது -

அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்

ஆ) சிறுபொழுது - எற்பாடு

கருப்பொருள்கள்

1. தெய்வம் -

வருணன்

2. உணவு -

மீன், உப்பு

3. விலங்கு -

உமண்பகடு (உப்பு வாணிகனின் மூட்டை சுமக்கும்
எருது), சுறா

4. மரம் -

புன்னை, ஞாழல், கண்டல்

5. பறவை -

அன்றில், அன்னம்

6. பறை -

மீன்கோட் பறை

7. தொழில் -

மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு
விளைவித்தல், நாவாய் ஓட்டல்

8. யாழ் -

நெய்தல் யாழ்

9. பண் -

நெய்தல் பண்

10. ஊர் -

பட்டினம், பாக்கம்

11. நீர் -

உவர்க்குழி (ஊற்றுநீர்), மணற்கிணறு

12. மலர் -

நெய்தல், கைதை (தாழை)



உரிப்பொருள்

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

2.3.5 பாலைத் திணை

முதற்பொருள்

நிலம் - பாலை நிலம்

பொழுது -

அ) பெரும்பொழுது - வேனிற் காலம்,
பின்பனிக் காலம்
ஆ) சிறுபொழுது - நண்பகல்

கருப்பொருள்கள்

1. தெய்வம் -

கொற்றவை

2. உணவு -

வழிப்போக்கரிடம் திருடிய உணவு

3. விலங்கு -

யானை, புலி, செந்நாய்

4. மரம் -

இருப்பை, உழிஞை

5. பறவை -

கழுகு, பருந்து, புறா

6. பறை -

சூறை கோட் பறை

7. தொழில் -

வழிப்பறி, சூறையாடல்

8. யாழ் -

பாலை யாழ்

9. பண் -

பாலைப் பண்

10. ஊர் -

பறந்தலை

11. நீர் -

கூவல் (கிணறு, குழி)

12. மலர் -

மரா, குரா

உரிப்பொருள்

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.


இவ்வாறு வரும் திணைக் கருப்பொருள்கள் தத்தம் திணையில்
இடம்பெறுவதுடன் பிற திணையிலும் இடம் பெறுவதுண்டு.
அதற்குத் திணை மயக்கம் என்று பெயர்.